Monday, March 28, 2011

மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா ?

செல்வாவின் உடல் சற்று ஒல்லியாக இருந்தது. தான் எப்படியும் தனது உடல் அளவினை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய செல்வா அருகில் இருந்த மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறலாம் என்று சென்றார்.

செல்வாவின் உடலைச் சோதனை செய்த மருத்துவர் " ஒன்னும் பிரச்சினை இல்லை , மீன் சாப்பிட்டா உங்க உடம்பு ஒரு வாரத்துல 3 கிலோ ஏறிடும் " என்று கூறி அடுத்தவாரம் வந்து பார்க்குமாறு அனுப்பினார்.

ஒருவாரத்திற்குப் பிறகு மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்த செல்வாவின் எடை கொஞ்சமும் அதிகரிக்கவில்லை. இதைப் பார்த்த மருத்துவர் " மீன் சாப்டா உடம்பு வரும்னு சொன்னேனே , என்ன பண்ணுனீங்க ? "

" சார் நானும் ஒரு கிலோ எடை இருக்குற மீன் வாங்கி எங்க வீட்டுத் தொட்டில விட்டு தினமும் அதுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டுட்டே இருக்கேன் , அதுதான் கொழு கொழுன்னு வளருதே தவிர என்னோட எடை அதிகமாகவே இல்ல " என்றார் பரிதாபமாக.

இதைக்கேட்ட மருத்துவர் " என்ன சொல்லுறீங்க ? மீனுக்கு எதுக்கு சாப்பாடு போட்டீங்க ? " என்றார் குழப்பமாக.

" நீங்கதானே சொன்னீங்க , மீன் சாப்பிட்டா என்னோட உடம்புக்கு நல்லதுன்னு , அதான் மீனுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன் ., அதுவும் சாப்பிட்டுச்சு ! "

" நான் சொன்னது மீன நீங்க சாப்பிட்டா நல்லதுன்னு சொன்னேன் , மீன் சாப்பாடு சாப்பிட்டா அதுக்குத்தான் நல்லது , உங்களுக்கு இல்ல .." என்று கூறியவர் " இனிமேலாச்சும் மீன் வாங்கி நீங்க சாப்பிடுங்க " என்று அறிவுறுத்தினார்.

" சார் உயிரோட மீனா ? இல்ல செத்துப்போன மீனா ? "

எரிச்சலடைந்த அந்த மருத்துவர் " உயிரோட மீன் தான் " என்றார்.

" அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா ? , ஆனா ஒரு பானை தண்ணி என்னோட வயிறு பிடிக்காதே ?!! "

இந்தக் கேணத்தனமான கேள்வியை எதிர்பார்த்திராத அந்த மருத்துவர் " தயவு செஞ்சு வெளிய போறீங்களா ? இல்ல நான் போகட்டுமா ? " என்று கூச்சல் போட்டார்.

இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.

25 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

meen vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

meen pajji

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

meen protta

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீனா ரொம்ப பழைய பிகராச்சே...

karthikkumar said...

இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்//// இதெல்லாம் கிரியேட்டர்ஸ் லைப்ல சகஜம் மச்சி...:))

சௌந்தர் said...

ஐயோ ஐயோ டேய் முடியலடா உண்மையில் சிரிச்சேன் இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் :)செல்வா கலக்குறே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியோ இன்னிக்கு ஓட்டிட்டே..

வைகை said...

செல்வா புத்திசாலிதானே?

வைகை said...

நல்லவேள..அவரு மீன மட்டும் சொன்னாரு...மீனா...சாப்ட சொல்லல!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது..
சாப்பிடலன்னா மீனுக்கு நல்லது..

எப்பூடி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியே ஒரு எட்டு கவிதை வீதி வாங்க..

பிரதீபா said...

அப்டீக்கா பவானிசாகர் டேம் போனீங்கன்னா கடைல மீன் நெறைய வறுத்து வெச்சிருப்பாங்க.. இதுக்குப் போயி, பானை, சோறுன்னுட்டு..

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தக் கேணத்தனமான கேள்வியை

கேனத்தனமா.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.

ஹி ஹி ஃபினிஷிங்க் டச்சு? ஹா ஹா

Jey said...

சரி மக்கா சிரிச்சிட்டேன் போதுமா.

ப்ரியமுடன் வசந்த் said...

enjoyable read..!

//அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா//

Rolling On The Floor Laughing :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செல்வாவின் உடல் சற்று ஒல்லியாக இருந்தது. //////

சற்று ஒல்லியாவா இருக்கு................?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////செல்வாவின் உடலைச் சோதனை செய்த மருத்துவர் " ஒன்னும் பிரச்சினை இல்லை , மீன் சாப்பிட்டா உங்க உடம்பு ஒரு வாரத்துல 3 கிலோ ஏறிடும் " என்று கூறி அடுத்தவாரம் வந்து பார்க்குமாறு அனுப்பினார்./////////

யாருலே அந்த டாகுடரு..........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////" சார் நானும் ஒரு கிலோ எடை இருக்குற மீன் வாங்கி எங்க வீட்டுத் தொட்டில விட்டு தினமும் அதுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டுட்டே இருக்கேன் , ////////

நீ சொல்றத பாத்தா மீனுக்கு மட்டன் சிக்கன்னு செஞ்சு போட்டிருப்பே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////" அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா ? , ஆனா ஒரு பானை தண்ணி என்னோட வயிறு பிடிக்காதே ?!! "////////

யோவ் அப்பிடியே வளர்த்தாலும் வயித்துக்குள்ள கடிச்சு வெச்சிடுமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்தக் கேணத்தனமான கேள்வியை எதிர்பார்த்திராத அந்த மருத்துவர் " தயவு செஞ்சு வெளிய போறீங்களா ? இல்ல நான் போகட்டுமா ? " என்று கூச்சல் போட்டார்.////////

பேசாம அவரை வெரட்டிட்டு கிளினிக்க கைப்பத்தி இருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.////////

அடிவாங்கி வாங்கி உடம்ப ரணமா ஆக்கி வெச்சிருக்கான் போல...?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மெய்மறந்தேன்..

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?

ராஜ நடராஜன் said...

//எரிச்சலடைந்த அந்த மருத்துவர் " உயிரோட மீன் தான் " என்றார்.//

உயிரோட மீன் சாப்பிட்டா நல்லதுன்னு மெய்யாலுமே கொஞ்சம் பேர் மீன் வைத்தியம் செஞ்சுகிட்டிருக்காங்க இந்தியாவுல.