Tuesday, March 1, 2011

கார்த்திக் , அருண் மற்றும் செல்வா


சென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.

அருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.  

அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.

அருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,"யாருக்கும் தெரியாம வாங்கறது!" 

செல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் ? 

அருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் " அது பிக்காசோ படம் " என்றார்.

செல்வா : அது என்ன பழம் ? 

அருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்!

செல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா ? 

அருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட ? உசுர வாங்குறான்!!

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.

No comments: