Tuesday, March 1, 2011

எண்ணெய் வாங்கச்சென்ற செல்வா


ஒரு முறை செல்வாவின் தாயார் அவரிடம் கேன் ஒன்றினைக்கொடுத்து அருகில் இருக்கும் மளிகைக்கடையில் கடலை எண்ணெய் வாங்கி வருமாறு அனுப்பினார்.செல்வாவும் கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழு அவரது தாயார் "ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கிக்க , அப்புறம் அரை லிட்டர் தேன்  வாங்கிட்டு வந்திடு" என்றார்.

கடைக்கு சென்ற செல்வா தான் கொண்டு வந்திருந்த கேனை கடைக்காரரிடம் கொடுத்து " ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கொடுங்க " என்றார். ஒரு லிட்டர் கடலை எண்ணெயை வாங்கியவர் அந்த கேனை வாங்கி அருகில் இருந்த சாக்கட்டியை எடுத்து எண்ணெய் இருந்த அளவிற்கு ஒரு கோடு போட்டார். பின்னர் கடைக்காரரிடம் அதே கேனைக்கொடுத்து " அரை லிட்டர் தேன் , கொடுங்க" என்றார்.

இதைப் பார்த்த கடைக்காரர் இரண்டும் கலங்கிடும் என்றார். அதெல்லாம் கலங்காது , அதுக்குத்தான் கோடு போட்டிருக்கேன் , நீங்க குடுங்க " என்று அவரிடம் சண்டை போட்டு வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் கடையில் நடந்தவற்றை விளக்கினார். அதற்கு அவரது தாயார் " ஏன்டா , இப்படி பண்ற , ஒண்ணு கூட உருப்பிடியா பண்ண மாட்டியா ? " என்றார் கோபமாக. இதைக்கேட்ட செல்வா நான் கோடு போட்டுத்தானே வாங்கிட்டு வந்தேன் , அந்தக் கோட்டுக்கு மேல இருக்குறது தேன் , கீழ இருக்குறது கடலை எண்ணெய் " என்றார் அப்பாவியாக.

No comments: