Tuesday, March 1, 2011

அறிவாளி செல்வா


ஒரு நாள் செல்வா தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

   சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு  போனை கட் செய்தவர் முகத்தில் சந்தோஷ அலை வீசியது. தன் வீட்டில் இருந்து மின்சார வயர்களை எடுத்து தன்மீது போட்டுகொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினார். 

   மறு வினாடியே மின்சாரத்தால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நண்பருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

    அவரைக்காண வந்த அந்த நண்பர் என்ன ஆனது என்று விசாரித்தார். அதற்கு செல்வா " நீதான நேத்து போன் பண்ணும் போது நான் சரியான டியூப் லைட் அப்படின்னு சொன்ன , அதான் வெளிச்சம் வருதா அப்படின்னு டெஸ்ட் பண்ணலாம்னு கரென்ட் கொடுத்தேன். வெளிச்சம் வரவே இல்ல " என்றார் சந்தோசமாக.!

2 comments:

எஸ்.கே said...

அருமை நண்பரே தொடருங்கள்!:-)

Anonymous said...

apthiugal nanrraka vullana. Thodarungal. valthukkal.