Tuesday, March 1, 2011

எலிபோனும் செல்வாவும்


சில நாட்களுக்கு முன்பு செல்வாவின் வீட்டில் எலித் தொல்லை இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அவரது வீட்டில் எலிபோன் ( கூண்டு போன்ற ஒன்று , எலிபோன் என்பது பேச்சு வழக்கு) வாங்கி வந்தனர். ஆனாலும் எலித்தொல்லை தீர்ந்தபாடில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு எலி மருந்து வாங்கி எலித்தொல்லையை குறைக்கலாம் என்று வீட்டில் எலிமருந்து வாங்கி வைத்தனர். அதனைப் பார்த்த செல்வா "எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , இது விஷம் . எலிபோன்ல அது விழ மாட்டேங்குதுல அதான் இத வச்சா தின்னுட்டு செத்திடும்" என்று விளக்கினார் அவரது தாயார்.

அடுத்த நாள் காலையில் செல்வா அவரது தாயாரிடம் " அந்த எலி நம்மல ஏமாத்தப் பார்த்துச்சு , நான் அத ஏமாத்திட்டேன் " என்றார். ஏற்கெனவே பல இடங்களில் செல்வாவின் புத்திக் கூர்மையைப்(?!?) பற்றி அறிந்த அவரது தாயார் கொஞ்சம் அதிர்ச்சியாக " என்ன பண்ணின ? " என்றார்.

" நாம எலிக்கு மருந்து வச்சோம்ல , அத திங்காம எலி அந்த எலிபோனுக்குள்ள போய் ஒளிஞ்சிகிச்சு , ஆனா நாம தான் அதுக்கு எலி மருந்து வச்சிருக்கோம்ல , அதான் திறந்து விட்டுட்டேன் இப்ப அத தின்னுட்டு செத்திடும்  எப்படி ஐடியா.? " என்றார் எதையோ சாதித்தவராக!

No comments: