Tuesday, March 1, 2011

பதிவர் சந்திப்பில் செல்வா


நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வா மத்திய உணவு இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்றார். இவர் சைவம் என்பதால் சைவ உணவு வழங்கப்பட்ட பந்திக்கு சென்று அமர்து கொண்டார்.

சிறிது நேரத்தில் பந்தி பரிமாறுபவர் கையில் உணவுடன் வந்தார். செல்வாவின் அருகில் வந்த அவர் " கையை எடுங்க " என்றார். 

அதற்கு செல்வா " கையை எடுத்தா சாப்பிட முடியாதுங்க " என்றார் அப்பாவியாக.

" இலைல இருந்து கையை எடுங்க , சாப்பாடு வைக்கணும்.! "

" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.

" ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வழிந்து கொண்டே கையை எடுத்தார்.! 

No comments: