Tuesday, March 1, 2011

செல்போனும் செல்வாவும்


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் விடுமுறை நாள் ஒன்றில் பூங்காவிற்கு சென்றிருந்தனர். சிறிது நேரம் சுற்றிப்பர்த்தவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அப்பொழுது நண்பரின் தொலைபேசி ஒலித்தது. இவர்களின் மற்றும் ஒரு நண்பர் அழைத்திருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர் " ஐயோ இவன் கூப்பிடுறானே , நாம் பார்க் வந்தோம்னு சொன்னா என்னைய ஏன் கூப்பிடலைன்னு கேப்பானே ? " என்றவாறு அழைப்பினை தவறவிட்டார். "ஆனா இப்ப போன எடுக்காட்டியும் ஏன்டா போன எடுக்கலைன்னு கேப்பான் ,என்ன பண்ணலாம்.? " என்று செல்வாவிடம் கேட்டார். 

அதற்கு செல்வா " போன கொடு ஒரு ஐடியா இருக்கு! " என்று அவரது தொலைபேசியை வாங்கி , அதே நண்பருக்கு அழைத்தார். அந்த நண்பரிடம் " நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது , தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர் " ஹா ஹா , நல்லா ஏமாந்திட்டான்! " என்றார். இதைப் பார்த்த அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார். 

No comments: