Tuesday, March 1, 2011

கடல் மீன்


ஒரு நாள் செல்வா தன் வீட்டு மாடியில் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் . அங்கே வந்த அவரது தாயார் " என்ன ஆச்சு , ஏன் சோகமா இருக்க..? " என்றார்.

அதற்கு செல்வா நேத்து கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " 

"ஆமா , அத வளர்க்கலாம்னு சொன்னே , அதான் கொழம்பு வைக்கல , ஏன் கொழம்பு வைக்கணுமா..?" என்றார்.

" இல்ல அது கடல் மீன் தான , அதனால அதுக்கு தொட்டில நீச்சல் தெரியாதுல , நீச்சல் தெரியாம தண்ணில மூழ்கி செத்துடுட்சுனா என்ன பண்ணுறது அப்படின்னு நான் நீச்சல் பழகும் போது வாங்கின டியூப் எடுத்து அது நீச்சல் பழக வரைக்கும் இருக்கட்டும் அப்படின்னு அதோட முதுகுல கட்டி வச்சேன் .! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.

No comments: