Tuesday, March 1, 2011

லேண்ட்மார்க்கும் செல்வாவும்


ஒரு முறை செல்வா அவரது நண்பரைக் காண நண்பரின் ஊருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது செல்வாவிற்கு நண்பரின் வீடு தெரியாது என்பதால் செல்வாவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அழைக்குமாறு கூறியிருந்தார். செல்வாவும் நண்பர் கூறியது  போல பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு அழைத்தார்.

செல்வா : நான் பஸ் ஸ்டாண்ட் வந்திட்டேன்

நண்பர் : அங்கேயே இரு , வந்திடறேன் . நீ  எந்த இடத்துல நிக்கிறனு சரியா சொல்லு.?

செல்வா : அதான் பஸ் ஸ்டாண்ட்ல..

நண்பர் : அது தெரியுது , பஸ் ஸ்டாண்ட்ல எங்கனு சொல்லு , எதாச்சும் லேண்ட்மார்க் சொல்லு.

செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது ,  தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )

செல்வா : இங்க விக்காதுன்னு சொல்லுராங்கடா..!!

நண்பர் : உஸ் , லேண்ட்மார்க் அப்படின்னு பக்கத்துல இருக்குற பெரிய கட்டிடமோ , இல்ல எதாச்சும் அடையாளம் சொல்லு.. அது எங்கயும் விக்க மாட்டாங்க!!

செல்வா : இங்க ஒரு பெரிய கட்டிடம் இருக்கு , அதுல கூட பஸ் எல்லாம் வந்து நிக்குது.

நண்பர் : பஸ் ஸ்டாண்ட்னா பஸ் வந்து நிக்கத்தான் செய்யும். வேற எதாச்சும் சொல்லித்தொலை , உசுர வாங்காத.!

செல்வா : இங்க BSNL BROADBAND @ 225 PM அப்படின்னு எழுதிருக்கு.!

நண்பர் : அது நிறைய இடத்துல இருக்கும் , வேற எதாச்சும் சொல்லு.

செல்வா : இங்க ஒரு நோட்டீஸ் ஒட்டிருக்காங்க , NO SALES , NO RISK , NO MARKETING @ 15000 PM அப்படின்னு இருக்கு. இது போதுமா ?

நண்பர் : நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் , நான் உன்னப் பார்த்திட்டேன்.

செல்வா : சரி வா.அருகில் வந்த நண்பரிடம் நான் எப்படி கரட்டா லேண்ட்மார்க் சொன்னேன் பார்த்தியா ?

நண்பர் : நீ சொன்ன லேண்ட்மார்க வச்சு நாலு நாள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாது . அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்.

செல்வா : சரி நீ சொல்லு லேண்ட்மார்க் எங்க இருக்கு ?

நண்பர் : இனிமேல் உன் வாயத்தொறந்து எதாச்சும் கேட்டா கண்டிப்பா எனக்கு நான் அப்படியே போய்டுவேன்..!!!

No comments: