Tuesday, March 1, 2011

FANCY நம்பரும் செல்வாவும்


ஒரு முறை செல்வாவின் நண்பர் செல்வாவிடம் தனக்கு ஒரு சிம் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். செல்வாவும் சரி நான் நம்பியூர் செல்லும் போது வாங்கி வருகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் நம்பியூர் செல்கையில் செல்வா அந்த நண்பருக்கு அழைத்து தான் நம்பியூர் செல்ல இருப்பதாக கூறினார்.

உடனே அவரது நண்பரும் சிம் வாங்குவதற்குத் தேவையான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு செல்வாவிடம் கொடுத்தார். மேலும் செல்வாவிடம் "நல்ல பேன்சி நம்பரா பார்த்து வாங்கிட்டு வா" என்று கூறினார். சரி என்று கூறிவிட்டு செல்வாவும் கிளம்பினார்.

இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது நண்பர் " சிம் என்ன ஆச்சு ? " என்று ஆவலாக கேட்டார். அதற்கு செல்வா " நானும் நம்பியூர்ல இருக்குற எல்லா பேன்சிலயும் போய் கேட்டேன் , அவுங்க அவுங்களோட போன் நம்பர தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க! " என்றார் வெகுளியாக. இதைகேட்ட அவரது நண்பர் " உன்கிட்டப் போய் உதவி கேட்டேன் பாரு ? " என்று புலம்பியபடியே சென்றுவிட்டார்.

No comments: