Tuesday, March 1, 2011

செல்வாவும் வரட்டீயும்


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் ஒருவரும் பேக்கரி ஒன்றிக்கு டீ சாப்பிடலாம் என்று சென்றனர். அப்பொழுது செல்வா நண்பரிடம் " நீங்க டீ குடிப்பீங்கதானே , எனக்கு பால் " என்றார்.

நண்பர் : எனக்கு வரட்டீ ..

செல்வா : அது இங்க கிடைக்குமா ?

நண்பர் : எல்லா டீ கடைலயும் கிடைக்கும்..

செல்வா : ஆனா அது எப்படி தயாரிப்பாங்க..?

நண்பர் : எப்பவும் போலதான் ..

செல்வா : ஆனா குடிக்கும்போது பேட் ஸ்மெல் வராதா ?

நண்பர் : டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?

செல்வா : டீ மனம் தான். ஆனா வரட்டி ( கவனிக்க செல்வா வரட்டீ என்ற சொல்லை வரட்டி என்று புரிந்துகொண்டுள்ளார் ) எப்படி மனம் அடிக்கும் ?

நண்பர் : நீ சொல்லுறது எனக்குப் புரியலை.

செல்வா : வரட்டி அப்படின்னா சாணி எடுத்து செவுத்துல ரவுண்டா அடிச்சு வச்சிருப்பாங்களே அதுதானே , படத்துல பார்த்திருக்கேன்..

நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

No comments: