Thursday, March 10, 2011

செல்வா சொன்ன காரணம்!

ஒரு முறை செல்வாவின் உறவினர் ஒருவருக்கு உடல்நலன் குன்றியதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அந்த நண்பரின் உறவினர்களிடம் அவருக்கு என்ன பிரச்சினை என்றும் , எத்தனை நாட்களாக உள்ளது என்றும் விசாரித்துக்கொண்டிருந்தனர். மேலும் அவரது பழக்க வழக்கங்கள் , குடிப்பழக்கம் உள்ளவரா என்றும் விசாரித்தனர்.

ஒருவர் " அவர் கொஞ்ச நாளா அதிகமா தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்டாருங்க , அதுதான் காரணம் " என்றார்.

மற்றொருவர் " கொஞ்ச நாள் முன்னாடி அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்துச்சு, அப்போ அதிகமா கண்டுக்காம விட்டதால அது சீரியஸ் ஆகி ரொம்ப நொடிஞ்சு போய்ட்டார் , அதுல இருந்து அடிக்கடி இப்படி ஆகிடுது " என்றார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருந்தனர். செல்வாவிடமும் மருத்துவர்கள் அவரது உடல்நலக் குறைவிற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா ? என்று கேட்டனர்.

அதற்கு செல்வா " கொஞ்ச நாள் முன்னாடி எங்க ஊர் மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வச்சாங்க , அது சரியா பொங்கல , அதுதான் காரணம்!" என்றார்.

20 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி .ஹி ..வந்துட்டேன்

மாணவன் said...

நானும் வந்துட்டேன்.... :))

Madhavan Srinivasagopalan said...

ஐ ஆம் சாரி. . புரியலை..

NaSo said...

செல்வா சொன்னதுதான் சரி!!

எஸ்.கே said...

இதுக்கு பேர்தான் பட்டர்ஃபிளை எஃபக்டுங்களா?

மாணவன் said...

//எஸ்.கே said...
இதுக்கு பேர்தான் பட்டர்ஃபிளை எஃபக்டுங்களா?//

இருக்கும்... இருக்கும் :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சர்தான்... ஹி.ஹி

எஸ்.கே said...

பூ மிதிச்சா எல்லாம் சரியாயிடும்! ராம்சாமியை கூப்பிடுங்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

டேய்.. இரு போய் நாலு கெட்ட வார்த்தை கத்துக்கிட்டு வற்றேன்..

பன்னி.. இவன் இம்சைக்கு ஒரு அளவே இல்லாம போச்சி
இவனை கொஞ்சம் அடக்கிவை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

“ஐடியா திலகம்”

பட்டம் கொடுத்து உன்னை வாழ்த்துறேன்..
இதல்லாம் ஒரு பொழப்பு..

MANO நாஞ்சில் மனோ said...

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...............

MANO நாஞ்சில் மனோ said...

//அதற்கு செல்வா " கொஞ்ச நாள் முன்னாடி எங்க ஊர் மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வச்சாங்க , அது சரியா பொங்கல , அதுதான் காரணம்!" என்றார்//

அதுக்கு பதிலா உன்னை பொங்க வச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்துருக்காது...

MANO நாஞ்சில் மனோ said...

பாரு இதை படிச்சுட்டு #கவிதை வீதி# கீழ்பாக்கம் பக்கமா ஓடிட்டு இருக்கார்.....

MANO நாஞ்சில் மனோ said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
“ஐடியா திலகம்”

பட்டம் கொடுத்து உன்னை வாழ்த்துறேன்..
இதல்லாம் ஒரு பொழப்பு..//

நாறி போச்சு பொழப்பு....

வைகை said...

பொங்கலோ பொங்கல்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ மறுக்கா பொங்கிட்டா போச்சு.....!

Unknown said...

அருமை அருமை

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் செல்வா.. 80 மார்க்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...............

ம.தி.சுதா said...

பொங்கலும் பொங்குது... எனக்கு கோபம் பொங்குது... செல்வா நல்ல காலம் நீர் பக்கத்தில இல்ல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..