Saturday, April 16, 2011

பச்சை பச்சையாகப் பேசுவோருக்கு


( இந்தக் கதைல எந்த சிந்தனையும் இல்லைங்க. சும்மா சிரிச்சிட்டுப் போலாம் )

செல்வா ஒரு முறை அவரது நண்பரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். செல்வா தன்னுடன் ஒரு ஸ்டவ் அடுப்பினை எடுத்து வந்திருந்தார் . அப்பொழுது அவரது நண்பர் இன்னொரு நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். 

" டேய் , புத்தாண்டு அதுவுமா காலைல எட்டு மணிவரைக்கும் தூங்கினா இந்த வருஷம் முழுசும் தூங்கிட்டேதான் இருப்ப, உனக்குப் போய் போன் பண்ணினேன் பாரு " என்று கூறிவிட்டு அந்த நண்பருடன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

உடனே செல்வா " டேய் , எனக்கு ஒரு சந்தேகம் ? " என்றார்.

" உனக்குத்தான் அடிக்கடி சந்தேகம் வந்திடுமே ! சொல்லு " 

" புத்தாண்டு அன்னிக்கு நேர வரைக்கும் தூங்கினா வருஷம் முழுசுமே அப்படி இருக்கும்னு சொன்னீல , அதே மாதிரி புத்தாண்டு அன்னிக்கு ஒருத்தன் செத்துப் போய்ட்டா வருஷம் முழுக்க அவன் செத்துட்டே இருப்பானா ? ஆனா அது முடியாதுல ! "

செல்வாவை முறைத்துப் பார்த்தவர் " அது ஒரு பேச்சுக்குச் சொல்லுறது ! " என்று கூறிவிட்டு " ஆமா , எதுக்கு அடுப்பு எடுத்துட்டு வந்திருக்கற ? " 

" நீ தான நான் பச்ச பச்சையா பேசுறேன்னு சொன்ன , அதான் ஒரு குண்டாவுக்குள்ள தண்ணி ஊத்தி நான் பேசுறத செல்போன்ல ரெகார்ட் பண்ணி அந்த செல்போன தண்ணிக்குள்ள போட்டு அடுப்பப் பத்தவச்சு அத வேக வச்சிடோம்னா நான் பேசுறது பச்சையா இருக்காதுல்ல ?! எப்படி ஐடியா ? "

" எனக்கு இதுவும் வேணும் , இன்னமும் வேணும் ! "

" என்கிட்டே ஒரு அடுப்புதான் இருக்கு ?! "

" உஸ்ஸ்ஸ்.. என்னால முடில டா.. சர்க்கரைல எறும்பு ஏறுதுன்னு அதுக்கூட எறும்பு மருந்தக் கலக்கி வச்சவன்தான நீயி .. உன் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் ! " என்று புலம்ப ஆரம்பித்தார்  அந்த நண்பர்.

14 comments:

மாணவன் said...

vadai...

மாணவன் said...

ஹிஹி... யாரு அந்த நண்பர்...நம்ம கார்த்திக் மச்சிதானே..!!

செல்வா said...

//ஹிஹி... யாரு அந்த நண்பர்...நம்ம கார்த்திக் மச்சிதானே..!!
//

இது ரகசியம்ம் .. ஆமா அவன் தான்.. ஹி ஹி

karthikkumar said...

இது ரகசியம்ம் .. ஆமா அவன் தான்.. ஹி ///
அடபாவி ரகசியம்னு சொல்லிட்டு பேரையும் சொல்றானே ....:))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போங்கடா....

அப்புறம் பச்ச பச்சயா திட்டப் போறேன்...

சௌந்தர் said...

மச்சி நீ கலக்குறே டா சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கு கலக்கு...

சக்தி கல்வி மையம் said...

இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களிலிருந்து ஒரு சிறுகதைக்கான கரு எடுக்கிறிர்களே அதுதான் இதன் வெற்றி..

செல்வா said...

// சௌந்தர் said...
மச்சி நீ கலக்குறே டா சூப்பர்....

//// MANO நாஞ்சில் மனோ said...
கலக்கு கலக்கு...

//

ஹி ஹி .. நன்றி ..

செல்வா said...

/இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களிலிருந்து ஒரு சிறுகதைக்கான கரு எடுக்கிறிர்களே அதுதான் இதன் வெற்றி.//

நன்றி அண்ணா ..

பெசொவி said...

//இந்தக் கதைல எந்த சிந்தனையும் இல்லைங்க. சும்மா சிரிச்சிட்டுப் போலாம்//

இப்படி சொல்லி மத்த கதைல எல்லாம் கருத்து இருக்குற மாதிரி பில்ட்-அப் என்னத்துக்கு?

dheva said...

நகைச்சுவை செல்வன் அப்டின்னு இன்று முதல் நீ அழைக்கபப்டுவாய்...தம்பி!

Unknown said...

என்ன கொடுமைய்யா இதெல்லாம்!

Unknown said...

என்ன கொடுமை சரவணன் இது