Tuesday, April 12, 2011

சாகுற போதும் தமிழ்ல பேசமாட்டங்க.!

செல்வா ஒரு முறை ஒரு குளக்கரையில் நடந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தவர் பின்னால் வந்த லாரி ஒன்றுக்கு வழிவிடுவதற்காகக் கரை ஓரத்தில் கால் வைத்தார்.

கரையின் ஓரம் மிகவும் ஈரமாக இருந்ததால் அவர் நின்ற இடம் அப்படியே குளத்திற்குள் சென்றது. அவரும் குளத்தில் விழுந்தார்.

அவருக்கு நீச்சல் தெரியாது போலும். " Help me ,Help me " என்று கத்த ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த செல்வாவிற்கு அன்பே சிவம் படத்தில் வரும் காட்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. அவர் விழுந்த இடத்திற்கு அருகில் சென்ற செல்வா

" ஏன் சார் சாகுற நேரத்துல கூட தமிழ்ல பேச மாட்டிங்களா ? " என்றார்.

செல்வாவைப் பார்த்த அந்த நண்பர் மேலும் " I can't swim , Help me " என்று உரக்கக் கத்தினார். செல்வா கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் செல்வா ஒரு தமிழ் ஆர்வலர்.

அவர் தமிழில் சொன்னால்தான் காப்பாற்றுவது என்று முடிவில் இருந்தார் செல்வா. அப்பொழுது செல்வாவின் நண்பர் அங்கே வந்தார்.

குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் அவரது நண்பர் சடாரெனத் தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தார். பின்னர் செல்வாவைப் பார்த்து 

" ஏண்டா , ஒருத்தன் தண்ணிக்குள்ள விழுந்து சாகக் கிடக்கிறான் , அவனக் காப்பாத்தாம என்ன பண்ணிட்டு இருக்க ? "

" போடா இவனே ., அவன் சாகும்போது கூட தமிழ்ல பேச மாட்டிங்கிறான் , அவன நான் எதுக்குக் காப்பாத்தணும் ? "

" நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ? பஞ்சாப்ல வந்து நின்னுட்டு தமிழ்ல பேசினாத்தான் காப்பாத்துவேன்னு சொல்லுறியே , உனக்கு அறிவு இருக்கா இல்லியா ? " 

" ஏன் பஞ்சாப்ல நாம தமிழ் பேசலியா ? "

" ஐயோ நம்மளுக்குத் தமிழ் தெரியும் அதனால பேசுறோம் , இவனுக்கு எப்படித் தெரியும் ? இவன் பஞ்சாப்காரன்ல!"

" தண்ணிக்குள்ள விழுறதுக்கு முன்னாடி தமிழ் படிச்சிட்டு விழ வேண்டியதுதானே! "

" மொதல்ல மனுசங்களப் பாருடா , மொழிய அப்புறம் பாத்துக்கலாம் ! " என்று கூறிவிட்டுக் கிளம்பினார் நண்பர்.

19 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது பரவா இல்லை. செல்வாவின் நண்பர் ஒருவர் F1,F1 அப்டின்னு கத்தினாரு. ஏன் தெரியுமா?

செல்வா said...

போலீஸ் வாழ்க :-)

செல்வா said...

//இது பரவா இல்லை. செல்வாவின் நண்பர் ஒருவர் F1,F1 அப்டின்னு கத்தினாரு. ஏன் தெரியுமா?
///

ஏன்னா அவர் செல்வாவின் நண்பர் .. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

அதான.. அந்தாளு எதுக்கு இங்கிலுபீசுல கத்தினாரு..
அட்லீஸ்ட் அவரோட தாய்மொழியிலேயே 'பச்சாவோ'னு கத்தி இருக்கலாமே....(செல்வாக்கு ஒண்ணுமே புரிஞ்சிருக்காது..)

தேவையில்லாம செல்வாக்கு கோவத்த கெளப்பிட்டாரு..

செல்வா said...

// அதான.. அந்தாளு எதுக்கு இங்கிலுபீசுல கத்தினாரு..
அட்லீஸ்ட் அவரோட தாய்மொழியிலேயே 'பச்சாவோ'னு கத்தி இருக்கலாமே....(செல்வாக்கு ஒண்ணுமே புரிஞ்சிருக்காது..)

தேவையில்லாம செல்வாக்கு கோவத்த கெளப்பிட்டாரு.. //


பாவம் செல்வா. அழுதுடுவாரு அப்புறம்.. ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் என்னடா இது ...ஹையோ என்னை கொல்லுறாங்க ..செல்வா கொல்லுறாங்க ...

karthikkumar said...

போலீசையும் கெடுத்துட்டானே இந்த செல்வா ....:)) செல்வா அண்ட் போலிஸ் ராக்ஸ்....:))

செல்வா said...

/ இம்சைஅரசன் பாபு.. said...
டேய் என்னடா இது ...ஹையோ என்னை கொல்லுறாங்க ..செல்வா கொல்லுறாங்க ./



யாரு யாரு ?

செல்வா said...

// karthikkumar said...
போலீசையும் கெடுத்துட்டானே இந்த செல்வா ....:)) செல்வா அண்ட் போலிஸ் ராக்ஸ்....:))//

போலீஸ் அல்வேய்ஸ் ராக்ஸ் மச்சி .. ஹி ஹி

அருண் பிரசாத் said...

அட கடைசி தத்துவம் வேற சொல்லிட்ட! Good....அய்யோ தமிழ்ல பேசனுமா? நல்ல...

செல்வா said...

// அருண் பிரசாத் said...
அட கடைசி தத்துவம் வேற சொல்லிட்ட! Good....அய்யோ தமிழ்ல பேசனுமா? நல்ல.//

அதான் பாருங்க ..தத்துவம் சொல்லிட்டேனே .. ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா எதுக்கு பஞ்சாப் போனாரு?#டவுட்டு (ஒரு வேலை அடிமாடா போயிருப்பாரோ?)

செல்வா said...

//செல்வா எதுக்கு பஞ்சாப் போனாரு?#டவுட்டு (ஒரு வேலை அடிமாடா போயிருப்பாரோ?)
//

அடிமாட போறதுக்கு கேரளா மட்டும்தானே .. இப்ப பஞ்சாப் வரைக்குமா ?

பனித்துளி சங்கர் said...

ஏலே செல்வா பாவம்ல அந்த சர்தார்ஜி . .தமிழ் நாட்டிலையே தொண்ணுறு சதவீதம் பேரு இப்படித்தாம்ல பேசுரான்வ அவங்களையெல்லாம் விட்டுவிட்டு எதுக்குல கதையை பஞ்சாப்புக்கு கொண்டுபோன !!????????????

MANO நாஞ்சில் மனோ said...

உன்கிட்டே மாட்டிட்டு முழிக்கிற நண்பர் பாவம்....

MANO நாஞ்சில் மனோ said...

// இம்சைஅரசன் பாபு.. said...
டேய் என்னடா இது ...ஹையோ என்னை கொல்லுறாங்க ..செல்வா கொல்லுறாங்க .//

வாயில இருக்கும் அருவாளை என்கிட்டே தாலேய், போட்டு தள்ளிர்றேன்....

Unknown said...

சரியான காமடி தல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

F1... F1... F1..................!!!