Monday, April 11, 2011

இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான செல்வா

இந்திய அணி உலகக் கோப்பை வாங்கியதற்கு பலரும் பலவித காரணங்கள் கூற செல்வாவின் காரணம் இதோ.

செல்வாவும் அவரது நண்பரும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது இந்திய அணியின் முதல் இரண்டு ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்ததும் அவரது நண்பர் மிகவும் கவலைப்பட்டார்.

" டேய் , என்னடா நாம தோத்துருவோம் போல இருக்கு.! , ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்று புலம்பினார்.

சிறிது நேரம் யோசித்த செல்வா " அவுங்க ஜெயிக்கணும்னா ஒரு ஐடியா இருக்கு ! " என்றார்.

" என்ன ஐடியா , சீக்கிரம் சொல்லு "

" டிவி ய ஆப் பண்ணனும் .. "

" டிவி ய ஆப் பண்ணுறதுக்கும் அவுங்க ஜெயிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் ? " என்று சற்று குழப்பத்துடன் கேட்டார் நண்பர்.

" இருக்கு ! " என்று கூறிவிட்டு டிவியை ஆப் செய்துவிட்டு இருவரும் வெளியில் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து பார்த்த பொழுது இந்திய வெல்லும் சூழ்நிலையில் இருந்தது. நண்பர் மகிழ்ச்சியில் குதித்தார்.

" டேய் , சூப்பர்டா ! நாம ஜெயிச்சிருவோம். நீ உண்மைலேயே பெரிய ஆளுடா.அது எப்படி டிவிய ஆப் பண்ணினா ஜெயிப்போம்னு கண்டுபிடிச்ச ? "

" அது ஒன்னும் இல்ல , நாம டிவி பார்த்தோம்னா அவுங்க கேமராவுக்கு போஸ் குடுத்துக் குடுத்து ஆடனும்ல. டிவிய ஆப் பண்ணிட்டா அந்தத் தொந்திரவு இல்ல. அதான் சொன்னேன் ! " என்றார் செல்வா சற்று பெருமிதத்துடன்.

உண்மையில் சாதாரண நாட்களாக இருந்திருந்தால் அந்த நண்பர் செல்வாவின் இந்தப் பதிலைக் கேட்டு செல்வாவை உண்டு இல்லை என்று பண்ணி இருப்பார்.ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற சந்தோசத்தில் இருந்ததால் எதுவும் செய்யவில்லை.

சிறிதுநேரம் இந்தியாவின் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நண்பர் பின்னர் செல்வாவிடம் " சரி உலகக் கோப்பை முடிஞ்சது , அடுத்து IPL தான். சரி IPL ல உன்னோடது எந்த டீம் ? "

" அதான் முடிஞ்சதே , நானும் வாங்கலாம்னு தான் பார்த்தேன். ஆனா கோடிக்கணக்குல சொன்னாங்க , நூறு , இருநூறு னா வாங்கிருப்பேன்! " என்றார் சோகமாக.

செல்வாவின் நண்பர் பல்லைக் கடித்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

10 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நூறு , இருநூறு னா வாங்கிருப்பேன்! " என்றார் சோகமாக.//

அதான கோடிக்கணக்குல வாங்க நீ என்ன ராசாவா?

Madhavan Srinivasagopalan said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... "அதான கோடிக்கணக்குல வாங்க நீ என்ன ராசாவா?"
//

ஒருநாள் செல்வாவும் 'ராசாவாக' வாழ்த்துக்கள்..

karthikkumar said...

அதான கோடிக்கணக்குல வாங்க நீ என்ன ராசாவா?///
இங்கு அரசியல் பேசாதீர்கள் ...:))

சக்தி கல்வி மையம் said...

ha..ha..ha..

MANO நாஞ்சில் மனோ said...

// என்ன ஐடியா , சீக்கிரம் சொல்லு "

" டிவி ய ஆப் பண்ணனும் .. "//

ஹா ஹ ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவின் நண்பர் பல்லைக் கடித்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.//

பாவம் நண்பர், இம்புட்டு தூரத்துல இருக்குற எங்களையே இந்த பாடு படுத்துரான்னா, பக்கத்தில் இருக்கும் நண்பர் கதி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லா கப்பையும் வாங்கி இருக்கலாமே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்தியா உலககோப்பை வெல்ல காரணமாகஇருந்த செல்வாவிற்கு என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லா கப்பையும் வாங்கி இருக்கலாமே?
///

இதெல்லாம் வெளிய சொல்லாதிங்க..
அப்புறம் செல்வாவ நாடுகடத்தப் போறாங்க..