Saturday, August 20, 2011

மீண்டும் ரயில்வே அதிகாரியாக செல்வா!


செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே. அடிக்கடி தனது புத்திக்கூர்மையை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதும் நாமறிந்ததே.

அதிலும் தனது உடலில் கெட்ட ரத்தமே ஓடக்கூடாது என்பதற்காக தனது உடலில் உள்ள சிரை (vein) நரம்புகளை முற்றிலும் உடலிலிருந்து எடுத்துவிடவேண்டுமென மருத்தவரிடம் சண்டைபோட்டது கூட செல்வாவின் அறிவுத்திறனுக்குச் சான்றுதான்.

ஒருமுறை ரயில்வே அதிகாரியாக இருந்து சில புதிய திட்டங்களைப் புகுத்தியதற்காக அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் என்பதை நாம் ஏற்கெனவே ரயில்வேயும் செல்வாவும் என்ற கதையின் மூலமாக அறிந்துள்ளோம்.

பின் சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் வேலை கிடைத்து அதிலும் பலப்பல புதிய நுட்பங்களைப் புகுத்தி மக்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

இருந்தபோதிலும் ரயில்வே துறை மீதிருந்த அவரது ஆசை அகலவேயில்லை.

மீண்டும் ரயில்வே பணிக்கான பரீட்சைகளைத் தொடர்ந்து எழுதி அதில் தேர்வு செய்யப்பெற்று மீண்டும் ரயில்வேயில் பணியில் அமர்ந்தார்.

இந்த முறை மிகக் கவனமாக எல்லா வேலைகளையும் செய்துவந்தார். ஆனாலும் விதி அவரை இந்த வேலையையும் நிம்மதியாகச் செய்யவிடவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு நெடுஞ்சாலைத்துறையில் தான் செய்துவந்த சிற்சில மாற்றங்களை இதிலும் செய்யவேண்டும் என தனது அதிகாரிகளுக்கு விரிவான ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமே அவரது வேலைக்கும் ஆப்பு வைத்தது.

அந்தக் கடித்ததில் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் “ பள்ளி , கல்லூரிகளுக்கு எதிராகவோ அல்லது அருகாமையிலோ இருக்கும் ரயில் தண்டவாளங்களில் வேகத்தடை அமைக்கவேண்டுமென்பதே!”

19 comments:

Madhavan Srinivasagopalan said...

அது அப்பவே நடந்துடிச்சே.. நாதான், இங்க(எட்டாவதா) சொல்லி இருக்கேனே..

செல்வா said...

அட பாவமே.. அத மறந்திட்டேனே.. எனக்கு இந்த ஐடியா போனவாரம்தான் தோனுச்சு.. நீங்க எனக்கு முன்னாடியே சிந்திச்சிட்டீங்க :)))) சூப்பர்னா..

Madhavan Srinivasagopalan said...

வரலாற்று நிகழ்வை யார் வேண்டுமானாலும்.. எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமே..
அதில் தவறென்ன, செல்வா..

நடந்தது.. நடந்ததுதானே.. ஒருவர் சொன்னால் அது தீர்ந்து விடுமா ?

செல்வா said...

//வரலாற்று நிகழ்வை யார் வேண்டுமானாலும்.. எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமே..
அதில் தவறென்ன, செல்வா..//

ஏற்கெனவே அப்படி ஒன்னு நடந்திருக்கா? நான் கற்பனையா தானே சொல்லிருக்கேன்..

rajamelaiyur said...

//
அந்தக் கடித்ததில் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் “ பள்ளி , கல்லூரிகளுக்கு எதிராகவோ அல்லது அருகாமையிலோ இருக்கும் ரயில் தண்டவாளங்களில் வேகத்தடை அமைக்கவேண்டுமென்பதே//

செம காமெடி

rajamelaiyur said...

உங்க மூளையை இந்த நாடு புரிந்துகொள்ளவில்லை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செய்யுங்கப்பா.. செய்யுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேகத்தடைய தண்டவாளத்துக்கு மேல வெக்கனுமா இல்ல கீழ வெக்கனுமா?

Mohamed Faaique said...

////அந்தக் கடிதமே அவரது வேலைக்கும் ஆப்பு வைத்தது.
////

அப்பாடா..இனிமே நிம்மதி...

Anonymous said...

வேகத்தடைய தண்டவாளத்துக்கு மேல வெக்கனுமா இல்ல கீழ வெக்கனுமா? // பின்நவீனத்துவப்படி பாக்கும்போது கீழ வேகத்தடை வைக்கிறத விட மேல வைக்கனும்னுதான் தோனும், ஆனா மிஸ்டர் பிள்ளைவால் எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க நடுவுல வைச்ச நல்லதுனு தோணுது..

// எங்க அம்மா அப்பவே சொன்னாங்க, செல்வா ப்ளாக் பக்கம் போகாதேன்னு, கேட்டனா இப்போ என்ன பேசுறேன்னு எனக்கே தெரியல

Anonymous said...

உங்களோட இந்த அறிவுப்பூர்வமான சிந்தனையை தஞ்சாவூர் கோயில் முன்னாடி கல்வெட்டுல செதுக்கி வைச்சுட்டு உக்காருங்க செல்வா, என்ன மாதிரி வருங்கால சந்ததிகள் பயனடையட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே.//

பிச்சிபுடுவேன் ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே.//

பிச்சிபுடுவேன் ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

அடிக்கடி தனது புத்திக்கூர்மையை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதும் நாமறிந்ததே.//

அடிங்.......

MANO நாஞ்சில் மனோ said...

அந்தக் கடித்ததில் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் “ பள்ளி , கல்லூரிகளுக்கு எதிராகவோ அல்லது அருகாமையிலோ இருக்கும் ரயில் தண்டவாளங்களில் வேகத்தடை அமைக்கவேண்டுமென்பதே!”//

எலேய் மொக்கையா உடனே அண்ணனுக்கு பத்து வயித்துவலி மாத்திரை வாங்கி அனுப்புலேய் சிரிச்சி முடியலை ராஸ்கல் ஒரு மனுஷனை கிறுக்கன் மாதிரி இப்பிடியா சிரிக்க வைப்பாயிங்க..? என் பிள்ளைங்க எல்லாம் என்னை ஒரு மாதிரியா பாக்குராயிங்க அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு அண்ணன்'தான் ஹி ஹி....

Unknown said...

செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே.//

பிச்சிபுடுவேன் ராஸ்கல்.....
NO NO ...

MELA KAIYA VACHA TAMIL NAADEY PATHIKITU ERIUM...

Anonymous said...

செம காமெடி..என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

Prabu Krishna said...

ஆண்டவா என்னை ஏன் இந்த லிங்க் பார்க்க வச்ச