Friday, October 14, 2011

காயம்

இது செல்வா முதல் முதலாக மிதிவண்டி பழகியபோது நிகழ்ந்த நிகழ்ச்சி.

நீண்ட நாட்களாக வீட்டில் போராடியதன் பயனாக அன்றுதான் செல்வாவிற்கு அவரது தந்தை புதிய சைக்கிள் ஒன்றை வாங்கித் தந்திருந்தார்.

இதற்கு முன்னர் செல்வா மிதிவண்டி ஓட்டியதில்லை என்பதால் அதனை தெருவில் தெற்கும் வடக்குமாக உருட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த அவரது நண்பர் செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுத் தருவதாகக் கூறினார்.

செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டுவதின் சாதுர்யங்களைச் சொல்லிகொண்டே செல்வாவை மிதிவண்டியின் மீதெறி அழுத்தச் சொல்லிவிட்டு கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டார் அவரது நண்பர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வாவுடன் அவரும் மிதிவண்டியில் ஏறிக்கொள்ள இருவருமாக ஓட்டத்தொடங்கினர். ஆனால் செல்வாவிற்குப் புதுப்பழக்கம் என்பதால் சரியாகத் திருப்பத்தெரியாததால் அருகில் இருந்த ஒரு குழிக்குள் சைக்கிளுடன் சேர்ந்து இருவரும் விழுந்துவிட்டனர்.

பெரிய குழியாக இல்லாவிட்டாலும் இருவருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டது. எப்படியும் மருத்துவமனைக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என்பது தெரிந்தது.

இருவரும் குழியிலிருந்து மெதுவாக எழுந்து தார்ச்சாலைக்கு வந்தனர். அப்பொழுது செல்வா தனது முழங்கைகளை மடக்கி தார்ச்சாலையில் தேய்க்க ஆரம்பித்தார். ஒரு காயத்திற்குப் பதிலாக பல காயங்கள் ஏற்பட்டுவிட்டது. 

” டேய், டேய்! என்ன பண்ற ? “ குழப்பத்துடனும் பீதியுடனும் கேட்டார் நண்பர்.

“ அப்புறமா சொல்லுறேன்! “ என்றவாரு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார் செல்வா.

மறுநாள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். செல்வா கையில் பெரிய கட்டுடன் நின்றுகொண்டிருந்தார். 

“ எதுக்குடா கைய நிலத்துல ஒரசி பெரிய காயம் பண்ணிட்ட ? “ நண்பரின் கேள்வி.

“ உனக்கு ஒரே காயம்தானே, உங்கிட்ட டாக்டர் எவ்ளோ பீஸ் வாங்கினார் ? “

“ 50 ரூபா! “

“ எனக்கு 6 காயம். அதுக்கும் அவர் அவ்ளோதான் வாங்கினார். ஒரு காயத்துக்கு ஐம்பது ரூபா குடுக்கிறதுக்கு நான் என்ன உன்ன மாதிரி இளிச்சவாயனா? அதான் நிலத்துல தேச்சு ஆறு காயம் பண்ணிட்டேன் “ என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார் செல்வா.

அன்றிலிருந்து அவரது நண்பர் செல்வாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.



12 comments:

பெசொவி said...

செல்வாவுக்கு ஏற்பட்ட காயம், அது தன்னால மாறும், ஆனா அவர் பிரெண்டோட மனசுல பட்ட காயம் அது ஆறவே ஆறாது.

வைகை said...

இதை இப்ப படிச்சு தொலசிட்டேனே? நான் எங்க போய் தேச்சிக்கணும்? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்றிலிருந்து அவரது நண்பர் செல்வாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோவ சனி போனா தனியா போகாதாம் அதுக்கு நீ நல்ல உதாரணம் ஹே ஹே ஹே ஹே ஹே....

வெளங்காதவன்™ said...

ஐயோ!
கொல்லுறான்யா!
முடியல அப்பு!

இராஜராஜேஸ்வரி said...

என்ன அறிவு!

Mohamed Faaique said...

தலைய கொண்டு போயி எங்கையாவது அடிச்சிருந்தா, மெண்டல் ஹாஸ்பிட்டல்`அ ஃப்ரீ அட்மிஷன் கெடச்சிருக்குமே!!! ஜஸ்ட்டு மிஸ்ஸு...

Madhavan Srinivasagopalan said...

// இதற்கு முன்னர் செல்வா மிதிவண்டி ஓட்டியதில்லை என்பதால் அதனை தெருவில் தெற்கும் வடக்குமாக உருட்டிக்கொண்டிருந்தார் //

வாஸ்து பிராப்ளம்..
கிழக்கு மேற்க போயிருந்தா அடிபடாம இருந்திருக்குமோ ?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

மை டியர் செல்வா ...........
சுஜாதா ..தான் இப்படி
ஒரு பாணியில் "நறுக் "
கதை சொல்லுவார்.
உங்களக்கும் அதன்
திறமை உள்ளது .
நகைசுவை writters
மிகவும் குறைவு .
உங்களிடம் ஒரு grazy மோகன்
உள்ளார் .நகைசுவை உலகில்
மிக பெரிய இடம்
உங்களக்கு உள்ளது .
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

மை டியர் செல்வா ...........
சுஜாதா ..தான் இப்படி
ஒரு பாணியில் "நறுக் "
கதை சொல்லுவார்.
உங்களக்கும் அதன்
திறமை உள்ளது .
நகைசுவை writters
மிகவும் குறைவு .
உங்களிடம் ஒரு grazy மோகன்
உள்ளார் .நகைசுவை உலகில்
மிக பெரிய இடம்
உங்களக்கு உள்ளது .
வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் .

Unknown said...

யோவ் கதையா இது? கதையான்னு கேக்குறேன்